எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 23, 2010

இன்னிக்கு டிபன் யாரோட பொறுப்பு??

சாயங்காலம் ஆச்சா? சூடாக் காபியோடயும், டீயோடயும் சாப்பிடறதுக்கு ஒண்ணுமே இல்லையா?? யாரு பண்ணித் தருவாங்க?? கடையிலே வாங்கியும் எத்தனை நாள் தான் சாப்பிடறது??

வீட்டிலேயே எதானும் பண்ணினால் என்ன??

என்ன பண்ணப் போறே??

தவலை வடை!

என்னது?? தவளை வடையா?? ஐயய்யோ! நீ எப்போ இதெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சே?

க்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒண்ணும் அதெல்லாம் சாப்பிடறதில்லை. தவளை இல்லை, தவலை. இந்த மழை பெய்ஞ்சாலும் பெய்ஞ்சது, தவளைங்க போடற சத்தத்திலே...............

ஹிஹிஹி, தவலை?? யு மீன் வெந்நீர்த் தவலை? அதன் அடிப்பாகம் கறுப்பாவே வச்சிருப்பயே, அப்படி ஒரு வடை?? வேண்டாம்பா ஆளை விடு. எனக்குப் பசியே இல்லை.

இதை நீங்கதான் பண்ணப் போறீங்க??

என்னது நானா???

ஆமாம், நீங்களே தான்! பண்ணுங்க, அப்போத் தான் தெரியும் சமைக்கிறது அவ்வளவு ஒண்ணும் சுலபம் இல்லைனு!